Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!
அடுத்தடுத்து காக்கிச் சட்டை வேடங்களாக வருகிறது சோனியா அகர்வாலுக்கு. அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த சாயா படம் சமீபத்தில்தான் வெளியானது. அடுத்து அவர் மீண்டும் போலீஸ் வேடம் போட்டுள்ளார் எவனவன் படத்துக்காக.
டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வின்சென்ட் அசோகன், புதுமுகம் அகில் சந்தோஷ், முருகாற்றுப் படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை - பெடோ பீட். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.நட்டிகுமார். இவர் தந்தை ஜானகிராமன் மோகமுள் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.
மெய்ப் பொருள், பனித்துளி படங்களை இயக்கியவர் நட்டிகுமார்.
எவனவன் படம் குறித்து அவர் கூறுகையில், "எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். .இதை செய்தால் இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர்.
பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் பலர் அப்படித்தான் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது. என்பதுதான் கதைக் களம்.
இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விறுப்பாகக் கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.
மெய்ப்பொருள், பனித்துளி படங்களின் படிப்பிடிப்பு பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கினோம். ஆனால் எவனவன் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திராவில் நடந்தது. பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது," என்றார்.