Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சோனியா-செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!
சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று இதை அறிவித்தது.
காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது சோனியாவும் செல்வராகவனும் காதலில் விழுந்தார்கள். பின்னர் இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்தது. ஆனால் ஓராண்டுதான் தாக்குப்பிடித்தது இந்தக் கல்யாணம். நடிகை ஆண்ட்ரியாவுடன் செல்வாவுக்கு தொடர்பு ஏற்பட்டதே இந்த பிரிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து இருவரும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு கொடுத்தனர். அதில் இருவரும் மனமொத்து பிரிவாதாக குறிப்பிட்டிருந்ததால், இருவருக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியது கோர்ட்.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக இறுதி விசாரணையில் தெரிவித்துவிட்டதால், தீர்ப்பை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். இருவருக்கும் அன்று சட்டப்பூர்வ விவாகரத்து வழங்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.