Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
“சூரரைப்போற்று“ 5 தேசிய விருதுகள்..மகிழ்ச்சியில் வார்த்தையே வரவில்லை.. நெகிழ்ந்த சுதா கொங்கரா!
சென்னை : சூரரைப்போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகளை வென்றுள்ளதை படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது.
இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
68வது தேசிய திரைப்பட விருதுகள்
68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் என 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியானத் தருணம் குறித்து மகிழ்ச்சியில் மூழ்கி உள்ள இயக்குநர் சுதா கொங்கரா, படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஜெயிச்சிட்டோம் மாறா
மேலும், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா, படத்திற்கு இத்தனை விருது கிடைத்திருப்பதை பார்க்கும் போது நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தைகளே வரவில்லை என, மகிழ்ச்சியில் திளைத்துப்போனார் சுதா கொங்கரா. படத்தை எடுக்கும் போது படம் நல்லபடியாக வெளியானால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதிற்குள் இருந்தது.
வெற்றி நிச்சயம்
அதுவும் வாழ்க்கை வரலாற்றுப்படத்திற்கு இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை இது மகிழ்ச்சி அளிக்கிறது. அவார்டுக்காக தனியாக படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்படம் உடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் முழு திறமையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. அது மட்டும் இல்லாம், ஒரு கதாநாயகனை முன்னிறுத்திய கதையில் அபர்ணா விருதைவென்றது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
எல்லை இல்லா மகிழ்ச்சி
படத்தில் 150 காட்சி வருகிறது என்றால், அதில் வெறும் 20 காட்சியில் மட்டும் தான் அபர்ணா வருவாள். ஆனால், அந்த காட்சிக்காக அபர்ணா உழைத்த உழைப்புதான் இன்று அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அதே போல சூர்யாவிடம் 100சதவீதம் நடிப்பை எதிர்பார்த்தால் அதை ஆயிரம் மடங்காக நமக்கு திருப்பி கொடுப்பார் அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி என்றார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!