Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்த முறையும் ஏமாற்றம்.. ஆஸ்கர் போட்டியில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று வெளியேற்றம்!
சென்னை: ஆஸ்கர் பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
ஆஸ்கர் என அழைக்கப்படும் 93வது அகாடமி விருதுகள் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று நாமினேஷன் பட்டியலில் ஆவது தேர்வாகுமா? என்கிற எதிர்பார்ப்பு கடைசி நேரத்தில் நிறைவேறாமல் போய் விட்டது.
93வது ஆஸ்கர்
92வது ஆஸ்கர் போட்டிக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நாயகி உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான ஆஸ்கர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீபாவளி ரிலீஸ்
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. ஒடிடி படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்கிற சிறப்பு விதியின் கீழ் ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று அனுப்பி வைக்கப்பட்டது.
வெளியேறிய ஜல்லிக்கட்டு
இந்திய அரசு சார்பாக சிறந்த அயல் மொழித் திரைப்பட பிரிவில் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலேயே அந்த படம் தேர்வாகாமல் வெளியேறியது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் ஓட்டிங்கிற்கு வரை சென்றது.
366 படங்களுடன் போட்டி
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதற்கான உத்தேச பட்டியல் போட்டியில் தொடர்ந்து 7 நாட்கள் சூரரைப் போற்று திரையிடப்பட்டு, அங்குள்ள ஜூரிக்களால் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 366 படங்கள் இந்த இறுதியில் போட்டியில் கலந்து கொண்டன. அதில் இந்தியாவில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்றும் கலந்து கொண்டதே பெருமையாக பார்க்கப்படுகிறது.
இந்த முறையும் இல்லை
தற்போது வெளியாகி உள்ள இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று இடம்பெறவில்லை. மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் ஆமிர் கானின் லகான் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு இந்திய திரைப்படம் கூட ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஏமாற்றம்
இந்திய ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்று ஒரு பிரிவிலாவது வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்கள் இதன்மூலம் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னதாக கோல்டன் குளோப் விருதுகளிலும் போட்டியிட்ட சூரரைப் போற்று கடைசி நேரத்தில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.