Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வருத்தம் தெரிவிக்கிறேன்..' பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்.. விஜய் சேதுபதி விளக்கம்!
சென்னை: பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்கை வெட்டியது ஏன் என்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று 43 வது பிறந்த நாள். இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாளால் கேக் வெட்டிய விஜய் சேதுபதி.. வைரலாகும் போட்டோ.. சரமாரி கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
இதையடுத்து ட்விட்டரில் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
பிறந்த நாள் கேக்
இதற்கிடையே, அவர் தனது பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் புகைப்படத்தில், இயக்குனர் பொன்ராம் உட்பட சிலர் இருக்கின்றனர். அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சில நெட்டிசன்ஸ், இது சரிதானா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதே நடவடிக்கை
இதற்கு முன், வாளால் கேக் வெட்டிய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இப்படி கேக் வெட்டுவது சரிதானா? அதே போன்ற நடவடிக்கையை இவர் மீது எடுப்பார்களா? என்றும் கூறியுள்ளனர். இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்டினால் என்னாவது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
விவாதமாகி இருக்கிறது
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பட்டாகத்தியால் கேக் வெட்டியது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பட்டாக் கத்தி
அதில், பிறந்த நாள் கேக்கை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினேன்.
புண்படுத்தி இருந்தால்
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.