twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை... மூன்றாவது முறையாக தாத்தாவானார் ரஜினி!

    By Shankar
    |

    ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    Soundarya blessed with male child

    சௌந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் சினிமா தயாரிப்பு, டைரக்ஷன் என பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த சௌந்தர்யா, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு வந்தார்.

    இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, சௌந்தர்யா திரையுலகில் எவ்வளவு வேண்டுமானாலும் சாதிக்கட்டும். ஆனால் அதற்கு முன் குழந்தைகள் பெற்றுக் கொள்ளட்டும் என்று மேடையிலேயே தெரிவித்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தாய்மைப் பேறு அடைந்தார் சௌந்தர்யா. நேற்று இரவு அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது.

    இதன் மூலம் இரண்டு பெண் வாரிகளைக் கொண்ட ரஜினிக்கு மூன்றாவது பேரன் பிறந்துள்ளார். தகவலறிந்து ரஜினி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளார்.

    English summary
    Soundarya Rajinikanth gave birth to a male baby at Apollo Hospital on yesterday night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X