Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா
கோச்சடையான் பணிகள் தொடர்பாகவே அவர் தனது அலுவலகம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ரசூல் பூக்குட்டி, தான் அடுத்து இயக்கும் புதுப்படம் குறித்து ரஜினியிடம் பேசியதாகவும், அதில் அமிதாப்புடன் ரஜினியும் இணைந்து நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.
இதனை மறுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினி.
அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கோச்சடையானின் ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார் என்றும், அது தொடர்பாக பேசவே ரசூல் பூக்குட்டி தனது அலுவலகத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரசூல் பூக்குட்டி, கோச்சடையான் ஒலி வடிவமைப்பு குறித்து சௌந்தர்யாவைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் ரஜினியை வைத்து நான் இயக்கப் போவதாக வந்த செய்தி எனக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. அப்படி ஒரு திட்டமே இல்லை. ரஜினி சாருக்கு தேவையில்லாத மன உளைச்சலை இந்த செய்திகள் தருமே என்ற கவலை எனக்குள்ளது. அமிதாப்பிடம் என் படத்தின் ஸ்கிரிப்டைக் கொடுத்தது மட்டுமே உண்மை," என்றார்.
ரசூல் பூக்குட்டி நியாயமாக வருத்தப்படவேண்டியது அவரது மேலாளரிடம்தான். அவர்தான் ரசூல் பூக்குட்டி ரஜினியைச் சந்தித்து கதை பற்றி விவாதித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார்!!