Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சௌந்தர்யா அஸ்வின் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘எனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி ஈராஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறேன். மேலும் எனது அடுத்த கட்ட பணியிலும் ஈடுபட உள்ளேன்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.
'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டின் போதே ரஜினி சௌந்தர்யாவை அவரது குடும்ப வாழ்க்கையை முதலில் கவனிக்கவும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இப்போது குழந்தை பிறந்த பிறகு, குழந்தையுடன் நேரம் செலவிடும்படி ரஜினி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் சௌந்தர்யா அஸ்வின். லிங்கா விவகாரத்தில் ஈராஸ் நிறுவனத்தின் பாராமுகமும் கூட இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
'எப்படியோ.. ஈராஸை விட்டு ரஜினியும் அவர் குடும்பத்தினரும் விலகி வந்தது நல்லதுதான்.. தேவையில்லாமல் ரஜினியை சிக்கலில் மாட்டிவிட்டதில் ஈராஸுக்கும் பங்கிருக்கிறது' என்பதே கோலிவுட்டில் நிலவி வரும் பரவலான கருத்து.