Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சௌந்தர்யா அஸ்வின் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘எனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி ஈராஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறேன். மேலும் எனது அடுத்த கட்ட பணியிலும் ஈடுபட உள்ளேன்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.
'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டின் போதே ரஜினி சௌந்தர்யாவை அவரது குடும்ப வாழ்க்கையை முதலில் கவனிக்கவும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இப்போது குழந்தை பிறந்த பிறகு, குழந்தையுடன் நேரம் செலவிடும்படி ரஜினி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் சௌந்தர்யா அஸ்வின். லிங்கா விவகாரத்தில் ஈராஸ் நிறுவனத்தின் பாராமுகமும் கூட இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
'எப்படியோ.. ஈராஸை விட்டு ரஜினியும் அவர் குடும்பத்தினரும் விலகி வந்தது நல்லதுதான்.. தேவையில்லாமல் ரஜினியை சிக்கலில் மாட்டிவிட்டதில் ஈராஸுக்கும் பங்கிருக்கிறது' என்பதே கோலிவுட்டில் நிலவி வரும் பரவலான கருத்து.