Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சௌந்தர்யா அஸ்வின் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘எனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி ஈராஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறேன். மேலும் எனது அடுத்த கட்ட பணியிலும் ஈடுபட உள்ளேன்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.
'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டின் போதே ரஜினி சௌந்தர்யாவை அவரது குடும்ப வாழ்க்கையை முதலில் கவனிக்கவும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இப்போது குழந்தை பிறந்த பிறகு, குழந்தையுடன் நேரம் செலவிடும்படி ரஜினி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் சௌந்தர்யா அஸ்வின். லிங்கா விவகாரத்தில் ஈராஸ் நிறுவனத்தின் பாராமுகமும் கூட இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
'எப்படியோ.. ஈராஸை விட்டு ரஜினியும் அவர் குடும்பத்தினரும் விலகி வந்தது நல்லதுதான்.. தேவையில்லாமல் ரஜினியை சிக்கலில் மாட்டிவிட்டதில் ஈராஸுக்கும் பங்கிருக்கிறது' என்பதே கோலிவுட்டில் நிலவி வரும் பரவலான கருத்து.