சௌந்தர்யா ரஜினிகாந்தின் “புது வெள்ளம்“… பொன்னியின் செல்வன் வெப் சிரீஸ்!

சென்னை : பொன்னியின் செல்வன் இணையத் தொடர் பணியை நடிகர் ரஜினி காந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி உள்ளார்.

Recommended Video

Soundarya Rajinikanth - Vishagan வாங்கிய புது வீடு | ECR | Tamil Filmibeat

அந்த தொடருக்கு புதுவெள்ளம் என்று பெயர் வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பகுதி ஸ்கிரிப்ட் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை சௌந்தர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமரர் கல்கியின்

அமரர் கல்கியின்

1899ம் ஆண்டு அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினம், கல்கி வார இதழில் தொடர்கதையாக 1950 முதல் 1955வரை வெளிவந்தது. இப்புதினத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக பல்வேறு காலகட்டங்களில் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.

எம்.ஜி.ஆர் படமாக்க விரும்பினார்

எம்.ஜி.ஆர் படமாக்க விரும்பினார்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் உரைநடை வீச்சு பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க எண்ணினார். இதற்காக கல்கியின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதியும் பெற்றார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பொன்னியின் செல்வன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது. இதற்காக நடிகர் நடிகையர் தேர்வு செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.

பொன்னியின் செல்வம்

பொன்னியின் செல்வம்

தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு குவாலியரில் நடைபெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதில் விக்ரம், கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பாபு, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற முன்னணி நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

புது வெள்ளம்

புது வெள்ளம்

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா 'புது வெள்ளம்' என்ற பேரில் பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக இயக்கும் பணியை தொடங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி நன்னாளான இன்று வெப் சீரிஸுக்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டே பொன்னியின் செல்வன் வெப் சீரிஸை இயக்கவிருப்பதாக சௌந்தர்யா அறிவித்திருந்தார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் கதையை வெப் சிரீஸாக, பிரபல இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இயக்குகிறார். இது தொடர்பான புகைப்படங்களை சௌந்தர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X