Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டீசர் லீக்கானதை பொறுத்து கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் கொதிப்பு
டீசர் லீக்கானதை பொறுத்து கொள்ள முடியாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.O படத்தின் டீசர் இணையதளத்தில் லீக்கானதை கண்டித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 2.0. இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.
எனினும் சில தொழில்நுட்ப பணிகள் இருந்ததால் பட வெளியீடு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காலா படம் வரும் ஏப்ரல் 27-இல் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் 2.O படத்தின் டீசர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே 1.27 நிமிடங்கள் கொண்ட டீசர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.
Leaking content online before the official release should not be TOLERATED or ENCOURAGED ! This is a heartless act ignoring hard work, efforts and sentiments of the makers for few seconds of excitement !!! #BeAshamed #StopPiracy #StopMisusingDigitalMedium
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 4, 2018
இதனால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடுவதற்கு முன்னால் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியானதை பொறுத்துக் கொள்ள முடியாது, ஊக்குவிக்கவும் முடியாது.
2.O படக்குழுவினரின் கடின உழைப்பு , முயற்சிகள், சில வினாடி குதூகலத்துக்காக டீசரை உருவாக்கியவர்களின் உணர்வுகள் ஆகியவற்றை புறந்தள்ளப்பட்டு மனசாட்சி இல்லாத முயற்சியே இதுவாகும் என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.