Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை கோர்ட்டில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மனு
சென்னை: கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். வேத் கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்தார். கருத்து வேறுபாடு காரணமாக சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவர்களை சேர்த்து வைக்க ரஜினி பெரிதும் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. அஸ்வின் சவுந்தர்யாவுடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும் அவர் தான் அடம்பிடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.