Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தொழில் அதிபரை மறுமணம் செய்யும் சவுந்தர்யா ரஜினிகாந்த்?
Recommended Video
சென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களாம்.
ரஜியின் இளைய மகள் சவுந்தர்யா தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். அவர்கள் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
சவுந்தர்யா தனது மகனுடன் தந்தையின் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார்.
எம்.ஐ.டி.யில் ட்ரோனை இயக்கிய அஜித்: வைரல் வீடியோ
|
சவுந்தர்யா
சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இது குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.
விசாகன்
விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமண செய்தியை அடுத்து நெட்டிசன்கள் விசாகனின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தேடிப் பிடித்து பார்த்து வருகிறார்கள்.
சென்னை
விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்தவர். சென்னையில் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 600 கோடி என்று கூறப்படுகிறது. குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் பத்திரிகையாளராக விசாகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஐபி
சவுந்தர்யா படம் இயக்குவது, தயாரிப்பது என்று பிசியாக உள்ளார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கினார். விஐபி 3 படம் வரும் என்று தெரிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு விஐபி 3 படம் துவங்கப்படும் என்றார் தனுஷ். ஆனால் இன்னும் அந்த பட வேலைகள் துவங்கவில்லை.
|
வணங்காமுடி
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ரஜினிகாந்தின் வருங்கால மருமகனான விசாகனின் தந்தை வணங்காமுடியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.