Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொழில் அதிபரை மறுமணம் செய்யும் சவுந்தர்யா ரஜினிகாந்த்?
Recommended Video
சென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களாம்.
ரஜியின் இளைய மகள் சவுந்தர்யா தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். அவர்கள் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
சவுந்தர்யா தனது மகனுடன் தந்தையின் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார்.
எம்.ஐ.டி.யில் ட்ரோனை இயக்கிய அஜித்: வைரல் வீடியோ
|
சவுந்தர்யா
சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இது குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.
விசாகன்
விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமண செய்தியை அடுத்து நெட்டிசன்கள் விசாகனின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தேடிப் பிடித்து பார்த்து வருகிறார்கள்.
சென்னை
விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்தவர். சென்னையில் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 600 கோடி என்று கூறப்படுகிறது. குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் பத்திரிகையாளராக விசாகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஐபி
சவுந்தர்யா படம் இயக்குவது, தயாரிப்பது என்று பிசியாக உள்ளார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கினார். விஐபி 3 படம் வரும் என்று தெரிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு விஐபி 3 படம் துவங்கப்படும் என்றார் தனுஷ். ஆனால் இன்னும் அந்த பட வேலைகள் துவங்கவில்லை.
|
வணங்காமுடி
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ரஜினிகாந்தின் வருங்கால மருமகனான விசாகனின் தந்தை வணங்காமுடியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.