Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மறுமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையான் பாதங்களில் வைத்து ஆசி பெற்ற ரஜினி மகள்
Recommended Video
சென்னை: தனது மறுமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையானின் பாதங்களில் வைத்து பூஜை செய்துள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்றார். சவுந்தர்யா தனது மகன் வேதுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு மறுமணம் செய்து வைக்கிறார் ரஜினிகாந்த்.
2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி
மறுமணம்
சவுந்தர்யாவுக்கும், வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விசாகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களின் திருமணம் ஜனவரி மாதம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
திருப்பதி
சவுந்தர்யாவின் திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு லதா ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்றார். அவருடன் சவுந்தர்யா, உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 20 பேர் சென்றனர். நேற்று காலை திருப்பதி ஏழுமலையானின் பாதங்களில் பத்திரிகையை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
சென்னை
சவுந்தர்யாவை போன்றே விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். மனைவியை பிரிந்த விசாகன் நடிகர் மட்டும் அல்ல தொழில் அதிபரும் ஆவார். ரூ. 600 கோடி மதிப்புள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து
மறுமணம் செய்யும் சவுந்தர்யாவுக்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் நல்லபடியாக வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். தலைவர் மகளாச்சே, பாசம் இல்லாமலா இருக்கும்.