Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கபாலி வெற்றிக்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை!
சென்னை: கபாலி படத்தின் வெற்றிக்காக ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
ரஜினி நடித்துள்ள ‘கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த 11-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்வை பெற்றுள்ளன.
புதிய டீசர்
இந்த நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டது. 35 நொடிகள் ஓடக்கூடிய அந்த முன்னோட்டப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிலீஸ்
‘கபாலி' படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் தேதி ரிலீஸ் என முதலில் சொல்லப்பட்டது. இப்போது ஜூலை 7 அல்லது 15-ம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.
சௌந்தர்யா
கபாலி படம் உருவாக முக்கிய காரணமே சௌந்தர்யாதான். அவர்தான் ரஞ்சித்தை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைத்தார். கபாலியின் வெற்றி அவருக்கு மிக முக்கியம்.
பிரார்த்தனை
எனவே ‘கபாலி' படம் வெற்றி பெறுவதற்காக காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினார் சௌந்தர்யா. நேற்று காளஹஸ்தி கோவிலுக்கு சென்று, அங்கு ராகு கேதுவுக்கு சிறப்பு பூஜை செய்தார்.
பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுணம்பிகா தாயாரை வழிபட்டார். குரு தட்சணாமூர்த்தி முன்பு வேத பண்டிதர்களிடம் ஆசி பெற்றார்.
பெரிய வெற்றி நிச்சயம்
பின்னர் சௌந்தர்யா நிருபர்களிடம் கூறுகையில், "கபாலி' படம் எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ரசிகர்களை இந்த படம் கவரும். பெரிய வெற்றிப் படமாக அமையும். இந்த படம் வெற்றிக்காக வாயுலிங்கேஸ்வரரின் ஆசியை பெறுவதற்காக இங்கு வந்தேன்," என்றார்.