Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா
சென்னை: விஐபி 2 படத்திற்கு அனிருத்தை விட்டுவிட்டு ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விஐபி படத்திற்கு இசையமைத்த அனிருத் விஐபி 2 படத்தில் இல்லை. விஐபி 2 படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விஐபி 2 படத்தில் அனிருத் இல்லாதது அவரது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து விஐபி 2 இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது,
அனிருத்
அனிருத்தை ஓரங்கட்டவில்லை. அனி ஒரு திறமையான இசையமைப்பாளர். அவரை நினைத்து எங்கள் குடும்பமே பெருமைப்படுகிறது. விஐபி 2 படத்திற்கு ஷான் தான் சரி என்று நானும், தனுஷ் சாரும் நினைத்தோம்.
கஜோல்
நான் கஜோலின் மிகப் பெரிய ரசிகை. நானும், டி சாரும் விஐபி 2 திரைக்கதை பற்றி விவாதித்தபோது வசுந்தரா கதாபாத்திரத்திற்கு கஜோல் மேடம் தான் சரி என்று எங்களுக்கு தோன்றியது.
மகன்
ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நான் என் மகன் வேதுடன் நேரத்தை செலவிடுவேன். யாத்ரா மற்றும் லிங்காவுக்கு தங்களின் அப்பா தனுஷை படங்களில் பார்க்க மிகவும் பிடிக்கும்.
சவுந்தர்யா
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, எங்கள் குடும்பத்தில் எதுவாக இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். ஆனால் தந்தை மற்றும் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.
அரசியல்
கமல் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, கமல் சாரும், அப்பாவும் எப்பொழுதுமே நல்ல நண்பர்கள். அவர் எப்பொழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.