Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“கடவுள் நம்முடன் இருக்கிறார்”.. விசாகனுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் மகன் நினைவில் சவுந்தர்யா!

சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவருடன் தேனிலவு சென்ற படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு கடந்த வாரம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனால் ரஜினியின் வீடு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திருமணத்தின் போதும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.
அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது, மகள் கைகளைப் பிடித்துக் கொண்டு ரஜினி நெகிழும் போட்டோ, மகன் வேத்தை தன் மடியில் அமர்த்தி விசாகனுடன் சவுந்தர்யா அமர்ந்திருக்கும் போட்டோ, தனுஷின் மகன் ரஜினி போலவே ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோ என பல வைரல் ஆனது.

சவுந்தர்யா ஹனிமூன்:
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் பறந்துள்ளனர் புதுமணத் தம்பதி. ஐஸ்லேந்து சென்றுள்ள அவர்கள், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

மகன் நினைவு:
உறைபனிக்கு நடுவே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. அந்தப் புகைப்படத்தில் தனது மகிழ்ச்சியை பல ஹேஷ்டேக் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கூடவே மகன் வேத்தை அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
|
ரசிகர் கவலை:
சவுந்தர்யாவின் இந்தப் பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், ‘வேத்தின் மனநிலை பற்றி அதிகம் பீல் செய்திருக்கிறார். சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தால் அவர் தனிமையில் இருப்பதாக நினைத்து விடுவாரோ என்பது அவரது கவலை.
|
வாழ்த்துக்கள்:
ஆனால், இந்த ரசிகரின் பதிவிற்கு பதிலாக மற்றொரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், ‘லதாரஜினி பார்த்துக் கொள்வார்' எனத் தெரிவித்துள்ளார். வேறொரு ரசிகரோ, ‘கவலைகளை மறந்து கிடைத்துள்ள வாழ்வைக் கொண்டாடுங்கள் சகோதரி' என வாழ்த்தியுள்ளார்.
"இந்தப் பொண்ணு டிரஸ் போட்ருக்கா இல்லையா..?" நெட்டிசன்களை கன்பியூஸ் செய்த சிம்பு ஹீரோயின்!