Just In
- 6 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 37 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- News
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அக்கா கணவர் தனுஷை இயக்க ஆசைப்படும் 'கோச்சடையான்' சவுந்தர்யா
சென்னை: தனது அக்கா கணவரும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷை வைத்து படமொன்று இயக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளும், கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்தவரான ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷின் மனைவி. இவர் தனது கணவர் தனுஷை வைத்து '3' என்ற படத்தை இயக்கினார்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா, தனது தந்தையான ரஜினியை நடிக்க வைத்து 'கோச்சடையான்' என்ற 3டி படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.

அடுத்தது ராணா தான்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் செய்தியாளார்களைச் சந்தித்த சவுந்தர்யா, கோச்சடையானைத் தொடர்ந்து ‘ராணா' படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்தார்.

திடீர் திருப்பம்....
இதன்மூலம், சவுந்தர்யாவின் அடுத்த படமும் ரஜினியுடையது தான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் திடீர் திருப்பமாக தனது ஆசை ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. அதாவது தனது இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

அற்புதமான நடிப்பு...
இது தொடர்பாக சவுந்தர்யா கூறுகையில், ‘ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாபதியில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன். அற்புதமான நடிப்பு.

பாராட்டு...
குண்டன் கதாபாத்திரத்திற்கு தனுஷ் அப்படியே பொருந்திப் போயிருந்தார். இதனை அவரை நேரில் பார்த்தபோது கூறி நான் அவரைப் பாராட்டினேன்.

விரைவில் எதிர்பார்க்கலாம்...
அவருடைய கால்ஷீட்டை எனக்கு கொஞ்சம் ஒதுக்கித் தந்தால் அவரை இயக்க நான் ஆர்வமாக உள்ளேன். விரைவில் எங்கலது கூட்டணியில் படம் உருவாகும்' என சவுந்தர்யா நம்பிக்கைத் தெரிவித்தார்.