சவுந்தர்யா திருமணம்: பட்டு வேட்டியில் ‘மாப்பிள்ளை’.. மரண மாஸ் டிரஸ்ஸில் ரஜினி!
மகள் திருமணத்தில் ரஜினி அணிந்திருந்த உடை மிகவும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சென்னை: மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு ரஜினி அணிந்திருந்த உடை மிகவும் சிறப்பாக இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்ற போதிலும், மிகவும் கோலாகலமாக இந்த திருமணம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணத்திற்கு ரஜினி பட்டு வேட்டி சட்டை அணிந்து, தோளில் துண்டு போட்டிருந்தார். மாப்பிள்ளை விசாகனும் அதே போன்று பட்டு வேட்டி, சட்டையுடன் தோளில் ஊதா நிறத்தில் பட்டுச் சேலை போன்ற துண்டு அணிந்திருந்தார்.
ஏற்கனவே, சவுந்தர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மிகவும் எளிமையான உடையில் வந்திருந்தார் என சர்ச்சையில் சிக்கினார் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ். குடும்பப் புகைப்படங்களிலும் அவர் இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால், இன்று அந்த சர்ச்சையை தவிர்க்கும் வகையில் பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார் தனுஷ்.

மாப்பிள்ளைகளைவிட ரஜினியின் உடை அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











