Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்… முக்கிய தீர்மானம் !
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தேவைப்படும் நிதி குறித்து விவாதிக்கப்பட்டது.
Recommended Video
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம்வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், இன்று நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்க தேவைப்படும் நிதியை வங்கியில் கடன் பெற்று கட்டிட பணிகளை நிறைவு செய்வதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
மேலும், மூத்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சங்க பொதுக்குழு இன்று கூடியது குறிப்பிடத்தக்கது.