Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது
மும்பை: டோலிவுட் நடிகை நைரா ஷா மற்றும் அவரது ஆண் நண்பர் மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 3 மணிக்கு இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது என்ன கண்ணுல கலரு.. ரெட்டை ஜடையில் வனிதா ஷேர் செய்த போட்டோ.. அதைக்கேட்கும் நெட்டிசன்ஸ்!
இருவரும் போதைப் பொருள் புழக்கம் கொண்டிருந்ததாக போதைப் பொருள் பிரிவு போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.
தென்னிந்திய நடிகை
ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் வெளியான மிருகா, தெலுங்கில் வெளியான புர்ரா கதா மற்றும் ஹோ கயா டோட்டல் சியப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நைரா ஷா. திங்கட்கிழமை அதிகாலையில் இருவரையும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
பர்த்டே பார்ட்டி
நடிகை நைரா ஷாவின் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் வசமாக சிக்கி உள்ளனர்.
ஒரு கிராம் சராஸ்
சிகரெட்டில் வைத்து இழுக்கக் கூடிய சராஸ் எனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஒரு கிராம் அளவிற்கு இவர்கள் இருவரையும் கைது செய்யும் போது சம்பவ இடத்தில் சிக்கியதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், நடிகை நைரா ஷா மற்றும் அவரது ஆண் நண்பர் ஆஷிக் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தினர்.
ஜாமின்
நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்ட இருவருக்கும் திங்கட்கிழமை ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் மரணம்
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தை விசாரித்த போலீசார் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு இருக்கும் போதைப் பொருள் தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட்டின் பெரிய தலைகளான பலருக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஞாயிறன்று இப்படியொரு போதைப் பார்ட்டி அரங்கேறி இருக்கிறது.