Don't Miss!
- News தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தென் இந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தென் இந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம், ரயில்மறியல், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் என பல கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல இளைஞர்கள் ஒன்று கூடி தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதே போன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.