Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை அலற விடும் ரசிகர்கள்!
சென்னை : தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டு பல ஆண்டுகளாக திரைப்படங்களில் சிறந்த நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா சிவக்குமார்.
நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சூர்யா பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து இன்று தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
இவ்வாறு தனது நடிப்பின் மூலமும், உதவும் குணத்தின் மூலமும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள சூர்யா இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.
அகரம் தந்த சிகரம்.. அன்பான நாயகனுக்கு ஹேப்பி பர்த்டே.. டிரெண்டாகும் #HappyBirthdaySuriya
உங்களுக்கு நடிப்பு வரவில்லை
தமிழில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்த நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா தனது தந்தை மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் இவர் சந்திக்காத அவமானங்களே கிடையாது. இவர் நடித்த முதல் படத்திலேயே உங்களுக்கு நடிப்பு வரவில்லை நடனம் வரவில்லை என பலரும் கேலிக்குள்ளாக்கி இவரின் தன்னம்பிக்கையை உடைத்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
விஜய்யுடன் இணைந்து
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட சூர்யா, இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார்.
நடனமும் ஆட வராது
நேருக்கு நேர் இவருக்கு முதல் படம் என்பதால் நடிப்பதில் பயங்கரமான தடுமாற்றம் இருந்த நிலையில் பலரும் இவரை நடிக்கத் தெரியவில்லை என உதாசீனப்படுத்தினர். அதைப்போன்று நடனமும் சரிவர ஆட வராத சூர்யாவை ஒரு கல்லூரி நிகழ்ச்சியின்போது அங்கு இருந்த மாணவிகள் பலரும் இவரின் "அவள் வருவாளா" பாடலில் வரும் நடன அசைவுகளை கூறி கிண்டல் அடித்துள்ளனர்.
உச்ச நட்சத்திரமாக வளர்ந்து
இவ்வாறு தான் நடித்த முதல் படத்திலேயே பல வலிகளை தாங்கிய சூர்யா தனக்கு வந்த அனைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் தற்பொழுது நேர்மறையாக ஆக்கி தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.
சாக்லேட் பாயாக
நேருக்குநேர் திரைப்படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், இவரால் ஒரு முழுமையான வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியவில்லை. இயக்குனர் பாலா உடன் இவர் இணைந்த முதல் படமான நந்தா இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சாக்லேட் பாயாக வலம் வந்தவர் சூர்யா நந்தா திரைப்படத்தின் மூலம் இவரின் மீதுள்ள ரசிகர்களின் பார்வையை மாற்றி தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைப்படுத்திக் கொண்டார்.
முதல் கமர்சியல் வெற்றி‘
நந்தா படத்திற்கு பிறகு இவரது திரை வாழ்க்கையில் தொட்டதெல்லாம் வெற்றி என்றவாறு கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படம் இவருக்கு முதல் கமர்சியல் வெற்றி திரைப்படமாக உருவாகி இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.
வித்தியாசமான கதாபாத்திரத்தில்
காக்க காக்க படத்தின் மூலம் ஆரம்பித்த இவரது வெற்றிப் பயணம் பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி, வாரணம் ஆயிரம், அயன் என இன்றுவரை பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
தெலுங்கிலும் நம்பர் ஒன்
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதால், தமிழ் ரசிகர்களுக்கு இணையாக தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு சூர்யா நம்பர் ஒன் நடிகராக தெலுங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றளவும் தெலுங்கு நடிகர்களை போன்று சூர்யாவின் திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய ஓபனிங் இருந்து வருகிறது.
சூரரைப் போற்று
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யாவை நடிப்பின் நாயகன் என பலரும் அழைத்து வரும் நிலையில் இவரின் அசாத்தியமான நடிப்பில் உருவாகிவரும் சூரரைப் போற்று, அருவா போன்ற திரைப்படங்கள் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக காத்திருக்கின்றது.
பிறந்தநாள்
ஜூலை 23 ஆம் தேதியான இன்று இவர் தனது 45வது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இணையத்தை அலற விட்டு கொண்டிருக்கின்றனர்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!