Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்மா, பாட்டி வேஷத்துக்குக் கூட தமிழ் நடிகைகளைப் புறக்கணிக்கிறார்களே!- சவுகார் ஜானகி
சென்னை: தமிழ் சினிமாவில் அம்மா, பாட்டி வேடங்களுக்குக் கூட மும்பையிலிருந்துதான் நடிகைகளை வரவழைக்கிறார்கள். தமிழ் நடிகைகளைப் புறக்கணிக்கிறார்கள், என்றார் நடிகை சவுகார் ஜானகி.
சென்னையில் நேற்று நடந்த வானவராயன் வல்லவராயன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று சவுகார் ஜானகி பேசுகையில், "11 வருடங்கள் கழித்து நான் நடிக்க வந்து இருக்கிறேன். அந்த காலத்தில் இதுபோன்ற பாடல் வெளியீட்டு விழாக்கள் எல்லாம் கிடையாது. இப்போது சினிமாவே மாறிவிட்டது.
தமிழ் பட உலகில் கதாநாயகி வேடத்துக்கு மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைக்கிறார்கள். அது சரிதான். ஆனால் அம்மா, பாட்டி வேடங்களுக்கு கூட, மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைப்பது வேதனையாக இருக்கிறது.
நான் நடித்த 'சவுகார்' படத்தை தயாரித்த நிறுவனம் ஒரு புதிய படம் தயாரித்தார்கள். அந்த பட பூஜையில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு என்னைத்தான் அழைத்தார்கள்.
ஆனால் நடிப்பதற்கு என்னை அழைக்கவில்லை. மும்பையில் இருந்துதான் ஒரு நடிகையை வரவழைத்து நடிக்க வைத்தார்கள்,'' என்றார்.