Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இசையால் மனங்களை வருடிய பாடும் நிலா பாலுவின் 75வது பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்
சென்னை : அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமை எஸ்பிபி.
பின்னணி பாடகராக மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் தன்னை நிரூபித்தவர்.
கொரோனா நிவாரண நிதி… ரூ10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி!
தன்னுடைய மயக்கும் குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். தொடர்ந்து இவரது பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
குரலை மாற்றும் திறமை
எம்ஜிஆருக்காக தன்னுடைய பாடலை பாட ஆரம்பித்து தற்போதைய ஹீரோக்கள் வரை அனைவருக்கும் தனது குரலை பொருத்தியவர் எஸ்பிபி. இவரது சிறப்பு என்னவென்றால் தான் பாடும் ஹீரோக்களின் சொந்த குரல் போன்று தன்னுடைய குரலை மாற்றும் திறமை இவருக்கு இருந்தது.
பாலிவுட்டிலும் முத்திரை
கடந்த 1946ல் ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த பாலு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்தவர். மண்ணில் இந்த காதல் இன்றி எதுவும் நடக்காது என்று மூச்சுவிடாமல் கூறியவர். மேலும் சத்தம் இல்லாத தனிமையையும் தன்னுடைய பாடலில் மூலம் கேட்டவர்.
Recommended Video
50,000க்கும் மேற்பட்ட பாடல்கள்
இயக்குநர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பல முத்திரைகளை பதித்த இவர், 16 மொழிகளில் 50,000 பாடல்களுக்கும் மேல் பாடியவர். மடை திறந்து தாவும் நதியலையாக இவரது குரல் அனைவரது மனங்களிலும் பாய்ந்தது. இசைக்கலைஞன் தன்னுடைய ஆசைகள் ஆயிரம் என்றும் நினைத்தது பலித்தது என்றும் கூவியவர். ஆம்... 50,000 பாடல்களை பாடி தான் நினைத்ததை உண்மையாக்கினார்.
சிறப்பான கூட்டணி
தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு பரிணாமத்தை ஏற்படுத்தியவர் எஸ்பிபி. ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றாலும் படத்தின் பாடல்களை எஸ்பிபி -இளையராஜா கூட்டணி ஹிட் செய்தது. இவர்களது கூட்டணியில் உருவான பாடல்களுக்காகவே படத்தை தியேட்டர்களில் போய் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அந்த காலத்தில் இருந்தது.
இசைத்துறைக்கு இழப்பு
தன்னுடைய இறுதி காலம் வரையில் தன்னுடைய குரலை இனிமையாக வைத்துக் கொண்டிருந்தவர் எஸ்பிபி. சமீபத்தில் வெளியான தர்பார் படத்திலும் இவரது குரல் ஒலித்தது. கோடிக்கணக்கான மனங்களை தன்னுடைய பாடல்களால் வென்ற இந்த மாபெரும் இசைக்கலைஞர் கொரோனா என்ற அரக்கனை வெல்ல முடியாமல் கடந்த ஆண்டில் மறைந்தது இசைத்துறைக்கு மாபெரும் இழப்பு
Happy 75th Birthday dear #SPB Sir 🎂🎶 We miss you here on Earth 🙏🙏🙏#HappyBirthdaySPB pic.twitter.com/dgLePOxHv9
— Shweta Mohan (_ShwetaMohan_) June 4, 2021
பாடலால் இசையஞ்சலி
இன்று அவரது 75வது பிறந்தநாளை திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். இசையமைப்பாளர் தமன், மனோபாலா உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாடகி ஸ்வேதா மோகன் அவரது பாடலால் அவருக்கு இசையஞ்சலி செலுத்தியுள்ளார்.