Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி சரண்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் எஸ்.பி.பி. சரண் விளக்கி உள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
மருத்துவமனைக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக பிரார்த்தனை பண்ண மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் எஸ்.பி.பி. சரண்.
அப்பாவின் உடல் நிலை குறித்த தகவலை ஆங்கிலத்தில் கூறுவது எதற்காக என்றால், உலகம் முழுவதும் அப்பாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். அனைவருக்கும் பொதுவான மொழியில் இந்த அறிக்கையை சொல்கிறேன். தனியாக தமிழில் கூறவில்லை, தெலுங்கில் கூறவில்லை என யாரும் கோபம் கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
#Spb health update 25/8/20 pic.twitter.com/pX1HXqcd2O
— S. P. Charan (@charanproducer) August 25, 2020
எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமாகி அவர் மீண்டும் எழுந்து வந்து பாட வேண்டும் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமீபத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரொனா போய்விட்டது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், அவரது உடல் நிலை குறித்த அறிவிப்புகளை தானே சொல்கிறேன் என்றும் எஸ்.பி.பி. சரண் தெளிவுபடுத்தி இருப்பது வீண் வதந்திகளை தடுக்க வழிவகுத்து வருகிறது.