Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா? பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்!
சென்னை: அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பதுதான் இப்போது முக்கியமா என எஸ்பிபி சரண் காட்டமாக செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிபியின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலரும் மீளாமல் உள்ளனர். எஸ்பிபியின் மறைவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அஞ்சலி செலுத்தாத அஜித்
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிபியின் சிபாரிசால் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் அஜித், எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் அறிக்கையும் வெளியிடவில்லை, நேரிலும் அஞ்சலி செலுத்த வரவில்லை.
அஜித் மீது விமர்சனம்
எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்பி சரணுக்கு நெருங்கிய நண்பரான அஜித் அவர்களை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினாரா என்ற தகவலும் இல்லை. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் நடிகர் அஜித்தை கடுமையாக விளாசி வருகின்றனர்.
சரணிடம் கேள்வி
இந்நிலையில் எஸ்பிபியின் மருத்துவ சிகிச்சை கட்டணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து அவரது மகனான எஸ்பி சரண் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அஜித் இரங்கல் தெரிவிக்காதது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
என்ன பிரச்சனை?
அதற்கு பதிலளித்த எஸ்பி சரண், ஆம் அஜித் எங்கள் நண்பர், எங்கள் குடும்ப நண்பர் - ஆனால் அவர் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா? அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்து கொள்ளாவிட்டாலோ என்ன? அவர் தனது வீட்டிலிருந்து இரங்கல் தெரிவிக்கட்டும். அவர் பேசினாலும் இல்லாவிட்டாலும், அவர் என்னை அழைத்தாலும் இல்லாவிட்டாலும், என்ன பிரச்சனை? என் அப்பா போய்விட்டார், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் காலமானார்.
அம்மாவை பார்த்துக்கொள்வதா?
துக்கப்படுவதற்கு எங்களுக்கு நேரம் தேவை. என்னிடம் இதுபோன்ற பல்வேறு வதந்திகள் குறித்து தெளிவு கேட்க வேண்டாம். நான் உங்களின் கேள்விகளை தெளிவுபடுத்த வேண்டுமா அல்லது என் அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டுமா? தயவு செய்து உங்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!