Don't Miss!
- News மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்! "நீங்கள் ஒன்றும் அப்பாவி இல்லை!" ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்! பரபர
- Lifestyle கிரேக்க, எகிப்து மற்றும் ரோமன் வடிவ பாதங்களில் உங்க பாதம் எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றி நாங்க சொல்றோம்...
- Automobiles குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
தந்தையர் தினக் கொண்டாட்டம்... மறைந்த தந்தை எஸ்பிபிக்கு பாடலால் அஞ்சலி செய்த சரண்
சென்னை : இன்று சர்வதேச அளவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி திரைத்துறையினர் தங்களது தந்தைக்கு பாராட்டும் நன்றியையும் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்பிபி சரண் சமீபத்தில் மறைந்த தன்னுடைய தந்தை எஸ்பிபிக்கு பாடல் ஒன்றால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
50 ஆண்டுகள் இசைப்பயணம்
எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 1966ம் ஆண்டு தெலுங்கு பாடல் ஒன்றின்மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான பாடல்கள் மூலம் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்தவர். ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த ஆண்டில் மறைவு
பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ள இவர், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். இவர் தன்னுடைய கேரியரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
எஸ்பிபி சரண் பாடலால் அஞ்சலி
இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் தன்னுடைய தந்தைக்கு இசையால் அஞ்சலி செலுத்தியுள்ளார். எந்தன் நெஞ்சமெல்லாம் உனது நினைவுகள் என்று துவங்கும் அந்த பாடல் மிகவும் உருக்கமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
|
ட்விட்டரில் ஷேர் செய்த மதன் கார்க்கி
மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த லிரிக்ஸ் வீடியோ பாடலுக்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். எஸ்பிபி சரணே பாடியுள்ளார். பாடலின் இடையிடையே சரணும் எஸ்பிபியும் இணைந்துள்ள பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களும் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாடலை மதன் கார்க்கியும் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.