Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி.. நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் அர்ஜுன் புகழாரம்!
சென்னை: தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் அர்ஜுன் புகழாரம் சூட்டினார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் செங்குன்றம் அடுத்து உள்ள தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெஞ்சம் பதறுகிறது.. நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது.. எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்!
இறுதி சடங்குகள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உடைந்து போன அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை முறைப்படி செய்தார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.
அர்ஜுன் நேரில் அஞ்சலி
நடிகர் விஜய், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட வெகு சில பிரபலங்களே எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். நடிகர் அர்ஜுன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இறுதி சடங்கில் கலந்து கொண்டு எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தமிழுக்கு பெருமை
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜுன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அவர் ஏகப்பட்ட பாடல்களை பாடி இருந்தாலும், தமிழும் தமிழர்களும் தான் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றார்.
இசை உலகம் மட்டுமல்ல
எஸ்.பி. பாலசுப்ரமணியம் சார் மறைவு இசை உலகிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்குமான பேரிழப்பாகவே கருதுகிறேன். பாலு சார் இனி இல்லை என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. எப்படியாவது திரும்பி வந்துடுவாருன்னு பார்த்தோம்.. ஆனால், அவர் எல்லாரையும் ஏமாத்திவிட்டார் என அர்ஜுன் உருக்கமாக பேசினார்.