Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அமெரிக்காவில் கச்சேரி: எஸ்.பி.பி.க்கு வந்த அடுத்த சோதனை
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கச்சேரி நடத்தி வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் பாஸ்போர்ட், கிரெட்டி கார்டுகள் இருந்த பை திருடு போயுள்ளது.
எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் வெளிநாடுகளில் இசை கச்சேரி நடந்து வருகிறது. எஸ்.பி.பி. சரண் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பி. கலந்து கொண்டு பாடி வருகிறார்.
தற்போது அமெரிக்காவில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், ரொக்கம் உள்ளிட்டவை இருந்த பை திருடு போயுள்ளது.
இது குறித்து எஸ்.பி.பி. உடனே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அவருக்கு 24 மணிநேரத்திற்குள் மாற்று பாஸ்போர்ட் அளித்துள்ளனர்.
இதை எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பி. இசைஞானியின் பாடல்களை பாட அவரோ தன்னிடம் அனுமதி பெறாமல் பாடக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என்றார் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது.