Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
"கபாலி" வெற்றிக்காக காலபைரவர் சித்தர் பீடத்தில் வழிபட்ட "கலைப்புலி"
தூத்துக்குடி: கபாலி படத்தின் வெற்றிக்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள காலபைரவர் சித்தர் பீடத்தில் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டார்.
கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
கபாலி படத்துடன் சேர்த்து எந்திரன் 2ம் பாகத்திலும் ரஜினி நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் கபாலி பட வெற்றிக்காக கலைப்புலி தாணு கடவுளை நாடத் தொடங்கியுள்ளார்.
சிறப்பு வழிபாடுகள்...
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர் நகரில் 11அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, தேய்பிறை நாட்களில் யாகம், அபிஷேகத்துடன் கூடிய சிறப்புவழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
மார்கழி அமாவாசை...
மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு உலகமக்கள் அனைவரும் நலமாக, வளமாக வாழவேண்டி நேற்று ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவருக்கு சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் நடைபெற்றது.
கலைப்புலி தாணு...
சிறப்பு யாகத்தில் கலைப்புலி எஸ்.தாணு தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ரஜினிகாந்த் நடிப்பில் தான் தயாரித்துள்ள 'கபாலி' திரைப்படம் மிக பிரமாண்டமான வெற்றிபெறவேண்டி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகளை தாமே முன்னின்று நடத்தினார்.
21 வகை அபிஷேகம்...
அதனைத் தொடர்ந்து பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், குங்குமம் உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகளுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.