Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொங்கலுக்கு திரையரங்குகளில் 5 ஷோ காட்ட அனுமதி!
பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.
மேலும் தமிழக அரசின் அரசாணையின்படி வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.
அதுபோல் நடமாடும் திரையரங்குகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மேட்னி காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் மற்றும் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை காலை காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன் கூட்டியே இதுபற்றிய தகவல் தெரிவித்து விட்டு அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரி விக்கப்பட்டு உள்ளது.
எனவே தமிழக அரசின் அரசாணைப்படி அதிகப்படியான காட்சிகள் அதாவது ஐந்தாவது காட்சிகள் நடத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்