Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொதுக் குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்?- நாசர்
சென்னை: பொதுக்குழுவைக் கூட்டாமல் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை சரத்குமார் ரத்து செய்தது ஏன் என்று நடிகர் சங்க புதிய தலைவர் நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சங்க நிலத்தை சத்யம் சினிமாஸுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தம்தான், இவ்வளவு பரபரப்பு மற்றும் தேர்தலுக்கே காரணமாக அமைந்தது.
இந்த ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்து, அதற்கான கடிதத்தை வைத்துக் கொண்டு அமைதி காத்திருக்கிறார் சரத்குமார்.
காரணம் கேட்டபோது, தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை, வெற்றி பெற்று வந்தபிறகு இந்த ஒப்பந்த ரத்தைக் காட்டி, பூச்சி முருகனின் வழக்கை தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் தேர்தல் முடிவு எதிர்ப்பார்த்தற்கு மாறாக வந்ததால் இப்போது அறிவிப்பதாகக் கூறினார் சரத்குமார்.
ஆனால் இதனை விஷால் தரப்பு ஏற்பதாக இல்லை.
புதிய தலைவராகியிருக்கும் நாசர், "அதெப்படி சரத்குமார் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்? வழக்கு நிலுவையிலிருக்கும்போது இப்படிச் செய்ய முடியுமா? செயற்குழு, பொதுக் குழு என்று எதிலும் கலந்து பேசாமல் ஒப்பந்ததை ரத்து செய்தது ஏன்? ஒப்பந்தம் போடும்போது செயற்குழுவைக் கூட்டியதாகச் சொன்னாரே... ரத்து செய்யும் போதும் கூட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதே நேரம் நடிகர் சங்கத்துக்கு எந்த நஷ்டமும் இல்லாமல் ஒப்பந்தத்தை சரத்குமார் ரத்து செய்திருக்கிறார். எனவே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய கட்டடம் கட்ட வழியைப் பாருங்கள் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.