Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!
காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள்.
கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார்.
அடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். மனம் கொத்திப் பறவையில் தனி ஹீரோவாக வந்தார். ஆனால் இந்த மூன்று படங்களிலும் அவருக்குக் கிடைக்காத வெற்றி, தனுஷ் தயாரித்த எதிர்நீச்சலில் கிடைத்தது.
இருவரும் அண்ணன் - தம்பி எனும் அளவுக்கு பழகி வந்தனர். தனுஷ் வெளியில் சிவகார்த்திகேயனை தன் தம்பி என்றுதான் கூறுவார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர, அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த மரியான், நய்யாண்டி இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன.
முன்பு சிவகார்த்திகேயன் படத்தில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷ் புரமோட் பண்ணார். இப்போது நிலைமை தலைகீழ். தனுஷின் அடுத்த படமான வேலையில்லா பட்டதாரியில் கவுரவ வேடத்தில் வந்து தனுஷுக்கு பப்ளிசிட்டி தர வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
இதை தனுஷிடம் ஓதும் விதத்தில் ஓதி, புகைச்சலைக் கிளப்பியுள்ளார்களாம் கோடம்பாக்க நாரதர்கள். 'உங்களுக்கு வரவேண்டிய கதைகள்தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பது. நீங்களே உங்களுக்கு போட்டியாக ஒருத்தரை உருவாக்கிட்டீங்களே.. சினிமாவில் இந்த விஷயத்தில் சொந்தத் தம்பியாகவே இருந்தாலும் உஷாரா இருக்கணும்,' என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.
விளைவு, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தார். இப்போது அதுபற்றி எந்த இறுதி முடிவும் எடுக்காமல் உள்ளாராம்.