Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தாணுவின் ஒருதலைப்பட்சமான முடிவு... உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்!
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரின் அணிக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் நிற்கும் என கலைப்புலி தாணு நேற்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாணுவின் இந்த முடிவு பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதால், தயாரிப்பாளர் சங்கமே இரண்டாக உடையும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு முன் எப்போதும் பார்த்திராத அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது நடிகர் சங்கத் தேர்தல். இதில் நாளுக்கு நாள் விஷால் அணியினரின் கை ஓங்கி வருகிறது. விஷால் அணியையும் சரத்குமார் அணியையும் சந்திக்க வைத்து சமரசம் பேசலாம் என்று கலைப்புலி தாணு எடுத்த முயற்சிகளுக்கு விஷால் அணி சம்மதிக்கவில்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்கு சமரசம்..? இது நடிகர் சங்கப் பிரச்சினை. இதில் தயாரிப்பாளர் சங்கம் ஏன் தலையிட வேண்டும்? தேர்தலில் வெல்லும் அணியை வாழ்த்துவது மட்டும்தான் உங்கள் வேலை என்று விஷால் தரப்பு கூறிவிட்டது. இதனால் சரத்குமார் அணியை ஆதரிக்க தாணு முடிவு செய்துவிட்டார்.
ஆனால் தனது இந்த முடிவையே தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவாக அவர் அறிவித்துவிட்டார். இதனை ஏ எல் அழகப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
"சினிமா வரலாற்றில் எப்போதும் இப்படி நடந்ததில்லை. வேறு ஒரு சங்கத்தின் தேர்தல் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஒரு சார்பாக எப்படி முடிவு எடுக்கலாம்? பெருமளவு நடிகர்கள் விஷால் அணியில் உள்ளனர். மூத்த நடிகர்கள் அங்கு உள்ளனர். 'இவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை, சரத்குமார், ராதாரவியை மட்டும்தான் ஆதரிக்கிறோம்' என்று தாணு பகிரங்கமாகக் கூறுவது மிகப் பெரிய தவறு. இதில் ஏதோ கூட்டுச் சதி இருப்பதாக சந்தேகிக்கிறேன்," என்கிறார் ஏஎல் அழகப்பன்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், "தாணுவின் முடிவு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவாகாது. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் தேர்தல் இது. ஜனநாயக முறைப்படி இரு அணிகள் போட்டியிடுகின்றன. அதில் ஒரு அணிக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கமே களமிறங்குவது எத்தனை பெரிய கேலிக் கூத்து," என்றார்.
தாணுவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் வரும் அக்டோபர் 15-ம் தேதி தனி கூட்டம் ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் தாணு மற்றும் அவரது தலைமையிலான நிர்வாகக் குழுவுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.