twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Sri Lanka Blasts: கடவுளே, இதுக்கு ஒரு முடிவே இல்லையா?: பிரபலங்கள் அதிர்ச்சி

    By Siva
    |

    Recommended Video

    கொழும்பு குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்- வீடியோ

    சென்னை: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 பிரபல தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. தேவாலயங்களில் பிரார்த்தனை நடந்தபோது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    சரத்குமார்

    கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு நடிகரும், ச.ம.க. தலைவருமான சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சித்தார்த்

    இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து அறிந்து அதிர்ந்துவிட்டேன். வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்கிறார் சித்தார்த்.

    ஜி.வி. பிரகாஷ் குமார்

    இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
    #srilanka
    #srilankablasts

    இலங்கை

    இதெற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் துணை நிற்கட்டும் என்கிறார் நடிகர் வைபவ்.

    மித்ரன்

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    கவலைகளுக்கு இடையே நாம் ஒற்றுமையாய் இருப்போம். தீவிரவாதத்திற்கு நாடோ, மதமோ இல்லை என்று இயக்குநர் பி.எஸ். மித்ரன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Kollywood celebs are shocked and saddened by the multiple blasts in Sri Lanka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X