Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அய்யயோ.. ஐஸ்வர்யா ராய் என்னை கைவிட்டுவிட்டரே. நஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுத்த இலங்கை ஆசாமி!!
கொழும்பு: "சென்னை ஐஸ் ஹவுசில் இருந்து கொண்டு ஐஸ்வராயை திருமணம் செய்ய கனவு காணும் திரைப்பட வடிவேலு" நிஜத்திலே கொழும்பில் உருவாகி இருக்கிறார். ஆமாங்க.. ஐஸ்வர்ராய்க்கும் அந்த ஆசாமிக்கும் தொடர்பு இருந்தததாம். அபிஷேக் பச்சானை திருமணம் செய்து கொண்டதால் அந்த நபருக்கு மன உளைச்சல் என்று இப்போது புகார் கொடுத்திருக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்தவர் நிரோஷன தேவப்பிரிய. இவர் தற்போது தைவானில் வசித்து வருகிறார். இலங்கை போலீசில் இவர் அளித்துள்ள புகார் இதுதான்..
பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வராயுக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் அவர் அபிஷேக் பச்சானை திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். இப்படி ஐஸ்வராராய் என்னை ஏமாற்றியதால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. என் மன உளைச்சலுக்கு காரணமான ஐஸ்வர்யா ராயிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்.
இதுபற்றி என் மருமகன் ரொஷான் அஜித்திடம் கூறியிருந்தேன். மருமகனும் இலங்கையில் வழக்கு தாக்கல் செய்வதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால் மருமகன் வாக்குறுதி அளித்தபடி வழக்கை தொடரவில்லை. அவரும் என்னை ஏமாற்றிவிட்டார்.
இதனால் நானே தைவானில் இருந்து நேரில் வந்து புகார் அளிக்கிறேன். இதுதான் அந்த புகார்.
இந்த புகாரின் அடிப்படையில் மருமகனை இப்போது இலங்கை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் ஐஸ்வர்யா ராய்க்கு தெரியுமான்னுதான் தெரியலையே.