Don't Miss!
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நள்ளிரவில் தாக்கினார், 'ஆடி' காரை அபகரிக்கப் பார்க்கிறார்: பைனான்சியர் மீது ஸ்ரீரெட்டி புகார்
சென்னை: நள்ளிரவில் வீடு புகுந்து பைனான்சியர் சுப்பிரமணி தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் தங்கி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார்.
நேரம் கிடைக்கும்போது எல்லாம் யாராவது ஒரு பிரபலம் மீது பாலியல் புகார் கூறுகிறார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை தான் அடிக்கடி விளாசிக் கொண்டிருக்கிறார்.
பட வாய்ப்பு இல்லை: வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி இரவு 11 மணிக்கு வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணி தனது ஆடையை பிடித்து இழுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணி
ரெட்டி டைரி படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர் சுப்பிரமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட நான் தான் காரணம் என்று நினைத்து சுப்பிரமணி என்னை தாக்கியுள்ளார் என்கிறார் ஸ்ரீரெட்டி.
ஆடி கார்
சுப்பிரமணி என் ஆடி காரை அபகரிக்க முயல்கிறார். மேலும் என்னை அடைய நினைக்கிறார். அவரால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி அது குறித்து தெலுங்கானா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆடி கார்
தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த உடன் பங்களாவில் வசிக்கிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் அவரிடம் ஆடி கார் இருப்பது குறித்து அறிந்து அது எப்படி கிடைத்தது என்று கோலிவுட்டில் பேசத் துவங்கிவிட்டனர்.