Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோயில், அப்பா கன்ட்ரோல்.. அந்த டைப் பெண்கள்லாம் நல்லவங்கன்னு நினைக்கிறீங்களா? சர்ச்சை நடிகை பகீர்!
சென்னை: நடிகை ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள புதிய பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.
திண்டாடும் தியேட்டர்கள்.. கடந்த ஆண்டு இதே நாளில் எப்படி கொண்டாடியது தெரியுமா? #AvengersEndgame
பாலியல் புகார்கள்
தெலுங்கு சினிமாவில் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
பரபரப்பு கருத்து
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, பவன் கல்யாணை பற்றியும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இவர் தினமும் ஏதாவது பரபரப்பு கருத்துக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக்கி இருக்கிறார்.
பெண்கள் பற்றி
நடிகைகள் பற்றியும் அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சமந்தா, நயன்தாரா, த்ரிஷா பற்றியெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில் பெண்களை பற்றி பொதுவான கருத்துக்களை, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நல்லவர்களா?
'முழுவதுமாக உடையணிந்திருக்கும் பெண்கள், கோயில்களுக்குச் செல்லும் பெண்கள், பாரம்பரிய முறைப்படி இருப்பவர்கள், அப்பாவின் கன்ட்ரோலில் இருப்பவர்கள்...இந்த டைப் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நினைக்கிறீர்களா? நல்ல ஜோக்' என்று கூறியுள்ளார் ஶ்ரீரெட்டி.
கடும் விவாதம்
மற்றொரு பதிவில், நாங்கள் பப்புக்கு சென்றால், ஒழுக்கமற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் சிலர் மூலம் காயப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம். அவர்களை மறந்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் பதிவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி ரசிகர்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர். சில ரசிகர்களின் கேள்விக்கு கமென்டில் வந்து பதிலளித்திருக்கிறார் ஶ்ரீரெட்டி.