Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னை விபச்சாரின்னு சொன்னா நீங்களும் அதே கேஸ்ல உள்ள போவீங்க.. சாபம் விட்டு மிரட்டும் ஸ்ரீரெட்டி!
தன்னை பாலியல் தொழிலாளி என்றும் தான் கைது செய்யப்பட்டதாகவும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே புகாரில் கைது செய்யப்படுவீர்கள் என ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னை பாலியல் தொழிலாளி என்றும் தான் கைது செய்யப்பட்டதாகவும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே புகாரில் கைது செய்யப்படுவீர்கள் என ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னுடன் உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பான சாட்டிங் ஆதாரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீ லீக்ஸ், தமிழ் லீக்ஸ் என வெளியிட்டு வந்தார். இதில் பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்கள் அடிப்பட்டது.
அல்லோகளப்பட்டது
இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி அடுத்து என்ன தகவலை வெளியிட போகிறாரோ? யாரெல்லாம் சிக்கப்போகிறார்களோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஸ்ரீரெட்டியின் அதிரடியால் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவும் அல்லோகளப்பட்டது.
கமிஷனரிடம் புகார்
இந்நிலையில் பணம் பறிக்கும் நோக்கில் ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகினர் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறுவதாக இயக்குநரும் நடிகருமான வாராகி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
யூட்யூப் சேனல்கள்
ஸ்ரீரெட்டி மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் வாராகி தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சில யூட்யூப் சேனல்கள் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டதாக தெரிகிறது.
நீங்களும் உள்ள போவீங்க
இந்நிலையில் காலையிலேயே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த யூட்யூப் சேனல்களுக்கு சாபமிட்டு மிரட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி. அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான் கைது செய்யப்பட்டு விட்டேன் என்றும் நான் ஒரு பாலியல் தொழிலாளி என்றும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே கேஸில் கைது செய்யப்படுவீர்கள்.
நீங்கள்தான் பாலியல் தொழிலாளிகள்
இது என் சாபம். நான் பாலியல் தொழிலாளி அல்ல. நீங்கள் தான் பாலியல் தொழிலாளிகள். ஏனென்றால் வதந்திகளை பரப்பி ஒரு பெண்ணை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறீர்கள்.
விபச்சாரம் பெட்டர்
இதற்கு பாலியல் தொழில் எவ்வளவோ நல்லது. நீங்கள் மலத்தில் கிடக்கும் பூச்சிகள். சில யூட்யூப் சேனல்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு யூட்யூப் சேனல்கள் மீது பாய்ந்துள்ளார் ஸ்ரீரெட்டி.