Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நான் தற்கொலை செய்யப் போகிறேன்: நள்ளிரவில் போன் செய்த ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்: தற்கொலை செய்யப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்ததாக சமூக ஆர்வலர் சந்தியா கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் லீலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தொடரும் என்கிறார்.
தனது போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது என்று தெரிவித்துள்ளார் அவர்.
பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாணை கெட்ட வார்த்தையால் திட்டிய ஸ்ரீ ரெட்டியை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஸ்ரீ ரெட்டியை 'அந்த' தொழில் செய்யுமாறு கூறியுள்ளனர்.
மரணம்
நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று ஸ்ரீரெட்டி நேற்று இரவு என்னிடம் கூறினார். அவர் போனில் சொன்னதை கேட்டு எனக்கு பதட்டமாகிவிட்டது என்று சமூக ஆர்வலர் சந்தியா தெரிவித்துள்ளார்.
டாக்சி
நள்ளிரவாக இருந்தாலும் பரவாயில்லை என்று உடனே ஒரு டாக்சியை பிடித்து ஸ்ரீ ரெட்டியின் வீட்டிற்கு சென்றேன். ஸ்ரீ ரெட்டியை அவர் வீட்டில் தனியாக விட்டால் ஏதாவது செய்து கொள்வாரோ என்று நினைத்து அவரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்கிறார் சந்தியா.
அரசியல்
பவன் கல்யாண் அரசியலில் ஈடுபடுவது பிடிக்காதவர்கள் ஸ்ரீ ரெட்டியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. படுக்கைக்கு அழைப்பது குறித்து ஸ்ரீ ரெட்டி இவ்வளவு பேசியும் முன்னணி நடிகைகள் அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.