Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பைனான்சியர் மீது பொய் புகார்: நள்ளிரவில் நாடகமாடி போலீசில் சிக்கிய ஸ்ரீரெட்டி
சென்னை: பைனான்சியர் சுப்பிரமணி விஷயத்தில் ஸ்ரீரெட்டி நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
ஸ்ரீரெட்டி ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் ஸ்ரீரெட்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.
சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?
காவல் நிலையம்
சுப்பிரமணி விவகாரம் தொடர்பாக ஸ்ரீரெட்டி மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். மாலை 3.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீரெட்டியை விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அவர் தெரிவித்த விஷயம்.
ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி முன்பு தெரிவித்தது போன்று சுப்பிரமணி குடிபோதையில் அவர் வீட்டிற்கு வரவில்லை. மாறாக ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மது அருந்த வைத்துள்ளார். சுப்பிரமணிக்கு மது கொடுத்துவிட்டு ஸ்ரீரெட்டி ஜூஸ் குடித்துள்ளார். இதை அவரே விசாரணையில் தெரிவித்துள்ளார்.
வாடகை
சென்னையில் ஸ்ரீரெட்டி பெரிய பங்களாவில் வசித்து வருகிறார். அவருக்கு எப்படி பங்களாவில் தங்கும் அளவுக்கு வசதி என்று பலரும் வியந்தனர். இந்நிலையில் அந்த பங்களாவுக்கு சுப்பிரமணி வாடகை கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எச்சரிக்கை
ஸ்ரீரெட்டி நாடகமாடி தங்களின் நேரத்தை வீணடித்ததை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். மேலும் சுப்பிரமணியுடன் சமாதானமாக செல்வதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டி ஆடிய இந்த நாடகத்தால் அவர் முன்பு பலர் மீது தெரிவித்த புகார்கள் கூட நாடகமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்