நான் எப்போ சொன்னேன்.. நிரூபித்தால் கண்டிப்பாக நிர்வாணமாக நடப்பேன்..ஸ்ரீரெட்டி அதிரடி சவால்!
சென்னை: பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர். ஸ்ரீரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை ஆனால், பட வாய்ப்பு தருவதாக கூறி பலர் ஏமாற்றிவிட்டதாக கூறி, உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டார். அண்மையில் இவர், ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று சொன்னதாகவும் ஒரு தகவல் பரவ, நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. அப்படி சொன்னதுற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் என்று கேட்டுள்ளார்.
தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டிவிட்டு, தமிழ் நாட்டில் செட்டில் ஆனார். இங்கும், இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர், நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக அவர் பேசி வந்தார். மேலும் இந்த தேர்தலில் ஜெகன் மோகன் தோற்றுவிட்டால் நான் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக நடப்பேன் என்று அவர் சொன்னதாக ஒரு தகவலும் பரவி வருகிறது.
தேர்தலில் ஜெகன் மோகன் தோற்ற நிலையில் ஸ்ரீரெட்டி நிர்வாணமாக நடக்கவேண்டும் என ரசிகர்கள் அவரை தொல்லை செய்ய, இப்போது அவர் அதற்கு பதிலளித்துள்ளார். இது சம்மந்தமாக நான் எப்போது நிர்வாணமாக நடப்பேன் என்று சொன்னேன். நான் அப்படி சொன்னதாக நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக நான் நிர்வாணமாக நடக்கிறேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











