Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்: பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்து வருகிறார்.
அதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அனைவரையும் அதிர வைத்தார்.
தற்கொலை
சினிமா பின்னணி இல்லாமல் வந்த உதய் கிரண் போன்றோர் தற்கொலை செய்கின்றனர். ஏனென்றால் தெலுங்கு திரையுலகை நான்கு பெரிய குடும்பங்கள் ஆட்டி வைக்கிறது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
வாரிசுகள்
அந்த நான்கு குடும்பத்தார் தங்களின் குழந்தைகளை சினிமாவில் வளர்த்துவிட அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். வேறு யாராவது வளர்ந்தால் அவர்களை பற்றி தவறான கருத்துகளை பரப்பி நாசமாக்கிவிடுகிறார்கள் என்று ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
மீடியா
தெலுங்கு திரையுலகில் நடப்பது குறித்து மீடியாவிடம் எதுவும் கூறாமல் இருக்க எனக்கு கோடிக் கணக்கில் பணம் தர முன் வந்தது மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன். திரையுலகில் அவர்கள் மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரச்சனை
நான் எனக்கு மட்டும் அல்ல அனைத்து நடிகைகளுக்ககாவும் போராடுகிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன். அவர்கள் என் கெரியரை ஏற்கனவே நாசமாக்கிவிட்டார்கள். அதற்காக எல்லாம் போராடுவதை நிறுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
நடவடிக்கை
இந்த நாள் வரை கேசிஆர் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பெண் பிலிம் சேம்பர் முன்பு நிர்வாணமாக நிற்கிறாள். மக்கள் அவளை ஆர்வத்துடன் வந்து பார்க்கிறார்கள். முதல்வர் இது குறித்து சமூகத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.