Don't Miss!
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
“ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது”.. உருக்கமாக முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி
பேஸ்புக் பக்கம் மூலம் தெலுங்கானா முதல்வருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
Recommended Video
சென்னை: தெலுங்கு திரையுலகில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக குழு அமைத்ததற்காக, தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
படவாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதிரடியாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர், தொடர்ந்து பேஸ்புக் வாயிலாக பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.
Scoop: சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா.. என்ன சேனல், என்ன நிகழ்ச்சினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
புதிய குழு:
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசாரிக்க, தெலுங்கானாவில் ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குநர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பெருமை
இதனால் மற்ற தெலுங்கு நடிகைகளைப் போலவே ஸ்ரீரெட்டியும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஹைதராபாத்தை சேர்ந்தவளாக எனக்கு இன்று பெருமையாக இருக்கிறது.
ரியல் ஹீரோ:
அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார்.
நன்றி.. நன்றி:
வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என உணர்ச்சிப் பூர்வமாக அப்பதிவில் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!