Don't Miss!
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது”.. உருக்கமாக முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி
பேஸ்புக் பக்கம் மூலம் தெலுங்கானா முதல்வருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
Recommended Video
சென்னை: தெலுங்கு திரையுலகில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக குழு அமைத்ததற்காக, தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
படவாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதிரடியாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர், தொடர்ந்து பேஸ்புக் வாயிலாக பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.
Scoop: சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா.. என்ன சேனல், என்ன நிகழ்ச்சினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
புதிய குழு:
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசாரிக்க, தெலுங்கானாவில் ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குநர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பெருமை
இதனால் மற்ற தெலுங்கு நடிகைகளைப் போலவே ஸ்ரீரெட்டியும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஹைதராபாத்தை சேர்ந்தவளாக எனக்கு இன்று பெருமையாக இருக்கிறது.
ரியல் ஹீரோ:
அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார்.
நன்றி.. நன்றி:
வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என உணர்ச்சிப் பூர்வமாக அப்பதிவில் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.