Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எனக்கு நீங்க வேனும்..கட்டிப்பிடிச்சுக்கனும் போல இருக்கு.. ஆனா முடியாது.. சர்ச்சை நடிகை உருக்கம்!
சென்னை: எனக்கு இப்போ நீங்கள் தேவை ஆனால் நீங்கள் என்னை கட்டிப்பிடிக்க முடியாது என சர்ச்சை நடிகை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை ஸ்ரீரெட்டி, தனது எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.
அதோடு தன்னை பலரும் ஏமாற்றிவிட்டதாக கூறி நடு ரோட்டில் ஆடையின்றி நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பிரபலமானார் ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டிக்கு தடை
இதனை தொடர்ந்து தெலுங்கு திரைத்துறையான ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை விதித்தது. அதனை தொடர்ந்து சென்னைக்கு குடிப் பெயர்ந்தார் ஸ்ரீரெட்டி. சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
கடும் விமர்சனங்கள்
தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்களும் தன்னை ஏமாற்றியதாக கூறி குற்றம்சாட்டினார். இதனால் அவரது மொத்த பெயரும் டேமேஜ் ஆனது. தனது குடும்பம், தன்னுடைய எதிர்காலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசினார் ஸ்ரீரெட்டி. இதனால் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார்.
தனியாக வசிக்கும் ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் இந்த அதிரடியால் அவரது குடும்பத்தினரே அவரை ஒதுக்கி விட்டதாக தகவல் வெளியானது. இதனால் சென்னையில் தன்னுடைய வேலையாட்களுடன் தனியாக வசித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி அவ்வப்போது அவரது அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஃபேஸ் புக்கில் போஸ்ட் பதிவிட்டு வருகிறார்.
கட்டிப்பிடிக்க முடியாது
நேற்று நான் மன்னிப்பு கேட்கனும்னா உலகத்தில என்னோட அப்பாக்கிட்ட மட்டும்தான். சாரி அம்மா, அப்பா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய பதிவில், என் அம்மா என்னுடன் இல்லை. அவருடைய ஆதரவு குரலும் என்னை எப்போதும் வலிமையாக்குகிறது. நீங்கள் இப்போது எனக்கு தேவை அம்மா, ஆனால் உங்களால் கட்டிப்பிடிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
படுக்கைக்கு அழைப்பு
ஸ்ரீரெட்டியின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், உங்களின் வலி எங்களுக்கு புரிகிறது. நீங்கள் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகை ஸ்ரீரெட்டி, இயக்குநர் ராம்கோபால் வர்மாவை காதலிப்பதாக கூறினார். அவரை பகிரங்கமாக அண்மையில் படுக்கைக்கு அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.