Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போனி கபூர் காதலை சொன்னதும் கோபத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த ஸ்ரீதேவி
Recommended Video
மும்பை: போனி கபூர் தன் காதலை சொன்னதும் ஸ்ரீதேவி அவருடன் 8 மாதங்களாக பேசவே இல்லையாம்.
ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வசப்பட்டார். முதல் மனைவியிடம் உண்மையை சொல்லிவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார் போனி.
இது குறித்து போனி கபூர் பேட்டி ஒன்றில் முன்பு கூறியதாவது,
ஸ்ரீதேவி
நான் ஸ்ரீதேவி மீது காதல் வயப்பட்டபோது அது முதலில் ஒருதலையாக தான் இருந்தது. ஒரு முறை சென்னையில் என் நண்பர், அவரின் மனைவி, நான், ஸ்ரீதேவி, அவரின் அம்மா மதிய உணவுக்கு ஹோட்டலில் சந்திப்பதாக இருந்தது.
முதல் முறை
ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வர முடியவில்லை. அது தான் ஸ்ரீதேவி தனது குடும்பத்தார் யாரும் இல்லாமல் முதல்முறையாக வெளியே வந்தது.
காதல்
மதிய உணவு சாப்பிட்ட பிறகு நான் ஸ்ரீதேவியை வீட்டில் விடச் சென்றபோது என் காதலை தெரியப்படுத்தினேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. அதன் பிறகு 8 மாதங்களாக அவர் என்னுடன் பேசவே இல்லை.
குண்டுவெடிப்பு
1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அப்போது ஸ்ரீதேவி சீ ராக் ஹோட்டலில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் மகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
சமாதானம்
1993ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஸ்ரீதேவி எங்கள் வீட்டில் தங்கினார். அப்போது அவரின் கோபம் மாறி சமாதானம் ஆனார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்றார் போனி கபூர்.